search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது
    X

    பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் போலீஸ் தேடிய வாலிபர் கைது

    பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் ஒருவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நகரில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வழக்கில் கொரடாச்சேரி போலீசாரால் அதே ஊரை சேர்ந்த ராஜசேகர் (வயது33) உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவாரூர் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ராஜசேகர் மட்டும் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

    நீதிமன்ற உத்தரவின்பேரில் ராஜசேகரை கொரடாச்சேரி போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ராஜசேகர் கொரடாச்சேரிக்கு வந்துள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது வீடு அருகே பதுங்கியிருந்த போலீசார் வீட்டுக்கு வந்த ராஜசேகரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். 
    Next Story
    ×