search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமாம்பாக்கத்தில் சவாரி செல்வதில் ஆட்டோ டிரைவர்கள் மோதல்
    X

    கிருமாம்பாக்கத்தில் சவாரி செல்வதில் ஆட்டோ டிரைவர்கள் மோதல்

    கிருமாம்பாக்கத்தில் சவாரி செல்வதில் ஆட்டோ டிரைவர்களிடையே மோதல் ஏற்பட்டது.

    பாகூர்:

    புதுவை கிருமாம்பாக்கம் மெயின் ரோட்டில் ஆட்டோ ஸ்டேண்டு உள்ளது. இந்த ஆட்டோ ஸ்டேண்டில் கிருமாம்பாக்கம் காலனியை சேர்ந்த கார்த்திக் (வயது 33). மற்றும் கிருமாம்பாக்கம்- பிள்ளையார் குப்பம் சாலையை சேர்ந்த வேலுமணி (40) உள்ளிட்ட ஆட்டோ டிரைவர்கள் நேர அட்டவணைப்படி ஆட்டோ ஓட்டி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று கார்த்திக் செல்ல வேண்டிய சவாரியை வேலுமணி ஏற்றி சென்றார். இதனை வேலுமணியிடம் கார்த்திக் தட்டிக் கேட்டார்.

    அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வேலுமணி பேனாவால் கார்த்திக் முகத்தில் சரமாரியாக குத்தினார்.

    இதில், மூக்கு, காது, உதடு உள்ளிட்ட முகம் முழுவதும் படுகாயம் அடைந்த கார்த்திக் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குபதிவு செய்து வேலுமணியை தேடி வருகிறார்.

    Next Story
    ×