search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆபாச படத்தை காண்பித்து பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் - வாலிபர் மீது புகார்
    X

    ஆபாச படத்தை காண்பித்து பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் - வாலிபர் மீது புகார்

    ஆபாச வீடியோவை காட்டி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் வாலிபர் மீது இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
    மதுரை:

    மதுரை ரிசர்வ் லைன் காலனியை சேர்ந்த 20 வயது இளம்பெண் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தற்போது முனிச்சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் கேஷியராக உள்ளார்.

    இவர் தல்லாகுளம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் ஆசைவார்த்தை கூறிய வாலிபர் ஆபாச படம் காட்டி பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஓட்டலில் கேசியராக வேலை பார்க்கும் இளம் பெண் கல்லூரியில் படிக்கும்போது ராஜாஜி பூங்காவில் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்போது தத்தனேரி மெயின் ரோடு பாரதிநகரைச் சேர்ந்த கருப்பசாமி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கருப்பசாமி உறுதி அளித்தார். காதல் மொழி பேசிய அவர் உனது நிர்வாண படத்தை அனுப்பி வை என கூறி உள்ளார். காதலனிடம் மனதை பறிக்கொடுத்த இளம்பெண்ணும் விளைவை அறியாமல் காதலன் கேட்டவாறு படத்தை அனுப்பி உள்ளார்.

    அதனை அடிக்கடி காண்பித்து காதலியை வரவழைத்த கருப்பசாமி பாலியல் பலாத்காரமும் செய்துள்ளார். சிறிது காலத்திற்கு பிறகு காதலியை சந்திப்பதையே அவர் தவிர்க்க இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

    தன்னை திருமணம் செய்யும்படி அவர் பலமுறை வற்புறுத்தியும் கருப்பசாமி கண்டுகொள்ளவில்லை. மேலும் அடிக்கடி திருமணம் பற்றி பேசினால் உனது ஆபாச படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டலும் விடுத்தார்.

    இருப்பினும் இளம்பெண் விடாமல் திருமண பேச்சை பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி காதலியின் நிர்வாண படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

    இது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×