search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் 21-ந் தேதி போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம்
    X

    வேலூரில் 21-ந் தேதி போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் பொது ஏலம்

    வேலூர் மாவட்டத்தில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்களை வருகிற 21-ந் தேதி பொது ஏலத்தில் விடுகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவ்வாகனங்கள் உடைக்க தகுதியுள்ள நிலையில் உள்ளன. இந்த வாகனங்கள் வருகிற 21-ந் தேதி காலை 9 மணி முதல் வேலூர் நேதாஜி மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

    வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் ரூ.50 நுழைவு கட்டணம் செலுத்தியபின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர். ஏலத்தொகையுடன் 28 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கு உண்டான இரசீது வழங்கப்படும். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.

    விபரங்களுக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மதுவிலக்கு அமல்பிரிவு, வேலூர் அலுவலகத்தில் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.
    Next Story
    ×