என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரக்காணம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்16 Aug 2018 11:50 AM GMT (Updated: 16 Aug 2018 11:50 AM GMT)
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே குடும்ப தகராறு காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 56) விவசாயி.
இவர் நேற்று மதியம் அந்த பகுதியில் விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.
நிலத்துக்கு சென்ற கணபதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர்.
அங்குள்ள மோட்டார் கொட்டகையில் கணபதி வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷப்பாட்டில் ஒன்றும் கிடந்தது.
இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் கணபதி குடும்பத்தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (வயது 56) விவசாயி.
இவர் நேற்று மதியம் அந்த பகுதியில் விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.
நிலத்துக்கு சென்ற கணபதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர்.
அங்குள்ள மோட்டார் கொட்டகையில் கணபதி வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது அருகில் விஷப்பாட்டில் ஒன்றும் கிடந்தது.
இது குறித்து பிரம்மதேசம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கணபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் கணபதி குடும்பத்தகராறு காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X