என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பக்ரீத் பண்டிகை எதிரொலி - ரூ.1 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
Byமாலை மலர்16 Aug 2018 10:34 AM GMT (Updated: 16 Aug 2018 10:34 AM GMT)
வருகிற 22-ந்தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படுவதையொட்டி அய்யலூர் சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.
வடமதுரை:
திண்டுக்கல் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மாவட்டத்தில் மிகப்பெரிய ஆட்டுச்சந்தை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்த வியாபாரிகள் வருகின்றனர். வருகிற 22-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முஸ்லீம்கள் கூட்டு குர்பானிக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆடுகளை வாங்கிச் சென்று ஒருவாரம் வளர்த்து பண்டிகை நாளில் பலிகொடுத்து வழிபடுவார்கள். இதற்காக கரூர், அரவக்குறிச்சி, நத்தம், புத்தாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் அய்யலூர் சந்தைக்கு வந்திருந்தனர்.
விவசாயிகளும் அதிகளவில் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். செம்மறி ஆட்டுக்கிடா ரூ.10ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. விலை அதிகரித்துகாணப்பட்ட போதும் ஆட்டுக்கிடாய்களை வாங்க போட்டிபோட்டனர். இதனால் விரைவாகவே ஆடுகள் விற்றுத்தீர்ந்தது. நாட்டுக்கோழி விலையும் அதிகரித்து கிலோ ரூ.350-க்கு விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கத்தைவிட இந்த ஆண்டு ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இருந்தபோதும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது சந்தையில் விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் சந்தைக்கு வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்து காணப் படுவதால் கொள்ளை பயமும் உள்ளது. எனவே அய்யலூர் சந்தைக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றனர்.
திண்டுக்கல் அய்யலூரில் வியாழக்கிழமை தோறும் ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். மாவட்டத்தில் மிகப்பெரிய ஆட்டுச்சந்தை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்த வியாபாரிகள் வருகின்றனர். வருகிற 22-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக முஸ்லீம்கள் கூட்டு குர்பானிக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர். ஆடுகளை வாங்கிச் சென்று ஒருவாரம் வளர்த்து பண்டிகை நாளில் பலிகொடுத்து வழிபடுவார்கள். இதற்காக கரூர், அரவக்குறிச்சி, நத்தம், புத்தாநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லீம்கள் அய்யலூர் சந்தைக்கு வந்திருந்தனர்.
விவசாயிகளும் அதிகளவில் கால்நடைகளை சந்தைக்கு கொண்டு வந்திருந்தனர். செம்மறி ஆட்டுக்கிடா ரூ.10ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரம் வரை விற்பனையானது. விலை அதிகரித்துகாணப்பட்ட போதும் ஆட்டுக்கிடாய்களை வாங்க போட்டிபோட்டனர். இதனால் விரைவாகவே ஆடுகள் விற்றுத்தீர்ந்தது. நாட்டுக்கோழி விலையும் அதிகரித்து கிலோ ரூ.350-க்கு விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கத்தைவிட இந்த ஆண்டு ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருந்தன. இருந்தபோதும் பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது சந்தையில் விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் சந்தைக்கு வருவோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அதிகாலை நேரத்தில் இருள் சூழ்ந்து காணப் படுவதால் கொள்ளை பயமும் உள்ளது. எனவே அய்யலூர் சந்தைக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X