search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார் கண்ணாடியை நூதனமாக உடைத்து கொள்ளை- ஆந்திர வாலிபர் கைது
    X

    கார் கண்ணாடியை நூதனமாக உடைத்து கொள்ளை- ஆந்திர வாலிபர் கைது

    வளசரவாக்கம், சாலிகிராம், விருகம்பாக்கம் பகுதிகளில் கார் கண்ணாடியை நூதனமாக உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கம், சாலிகிராம், விருகம்பாக்கம் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கார் கண்ணாடிகளை நூதனமாக உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போகும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது.

    இதையடுத்து கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலிகிராமத்தில் கார் கண்ணாடியை உடைத்து கெள்ளைச்சம்பவம் நடந்தது. அந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் சந்தேகத்திற்கிடமான வாலிபரை பிடித்து இன்ஸ்பெக்டர் வேலுமணி விசாரணை நடத்தினார். அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தேவராஜ் என்பதும், வில்லிவாக்கம் ராஜமங்கலம் பகுதியில் தங்கி இருப்பதும் தெரிந்தது.

    அவர் நூதன முறையில் கார் கண்ணாடிகளை உடைத்து பல்வேறு இடங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக்கொண்டார். கொள்ளையில் ஈடுபட்டது குறித்து தேவராஜ் போலீசாரிடம் கூறும்போது, “கல்உப்பை வாயில் மென்று காரின் கண்ணாடியில் துப்பி விடுவேன். சிறிது நேரம் கழித்து அந்த கண்ணாடியை நூதன முறையில் உடைத்து பணத்தை திருடிச்செல்வேன்” என்று கூறி உள்ளார்.

    அவர் கொள்ளையில் ஈடுபட்டது குறித்தும், அவரது கூட்டாளிகள் பற்றியும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×