search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓட்டேரியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது
    X

    ஓட்டேரியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது

    ஓட்டேரியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    அம்பத்தூர்:

    ஓட்டேரி, திடீர் நகர் பகுதியில் தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த சீனு, சக்திவேல் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்கள் கொடுத்த தகவலின்படி கஞ்சா சப்ளை செய்த புளியந்தோப்பை சேர்ந்த ரூபனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 450 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×