search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலங்காநல்லூர், உசிலம்பட்டியில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
    X

    அலங்காநல்லூர், உசிலம்பட்டியில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை

    அலங்காநல்லூர், உசிலம்பட்டியில் ஒரே நாளில் 2 வீடுகளில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    அலங்காநல்லூர்:

    உசிலம்பட்டி அருகில் உள்ள நக்கலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் மனைவி கலாதேவி (வயது 34). இவரது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    எனவே அவர் வீட்டை பூட்டிவிட்டு கா.விலக்கு பகுதியில் இருக்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று இருந்தார்.

    இந்த நிலையில் யாரோ மர்ம நபர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த ரூ.36 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளை அடித்துச் சென்றுவிட்டனர்.

    இது தொடர்பாக கலாதேவி உசிலம்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முக பாண்டியன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    அலங்காநல்லூர் அருகே உள்ள பொதும்பு முல்லை நகரைச் சேர்ந்த முத்துச்சாமி மனைவி சவுந்தரம் (63). இவர் மகனுடன் சோழவந்தான் கோவிலுக்குச் சென்றார்.

    அப்போது யாரோ சிலர் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சவுந்தரம் அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×