search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் படுகாயம்
    X

    மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - 3 பேர் படுகாயம்

    உடையார்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் அருகே வாணத்திரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 63). விவசாயி. இவரது உறவினர்கள் ரவி (45), கலியபெருமாள். இவர்கள் 3 பேரும் ஒரு மோட்டார் சைக் கிளில் தத்தனூரில் ஜாதகம் பார்த்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். மூர்த்தியான் கிராமம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குணசேகரன் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேனி மாவட்டம், கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பிரசாத் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×