search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை தடுப்புசுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
    X

    சாலை தடுப்புசுவரில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

    எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் சாலையின் மையத்தடுப்புசுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த வாலிபர் பலியானார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த பெரியபுதுப்பட்டினத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவருடைய மகன் உசேன் (வயது 22). இவருடைய நண்பர் தேவேந்திரன் (19). இவர்கள் 2 பேரும் சொந்த வேலை காரணமாக மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார்சைக்கிளை தேவேந்திரன் ஓட்ட, உசேன் பின்னால் அமர்ந்து இருந்தார். தஞ்சை புறவழிச்சாலையில் மாதாக்கோட்டை பாலம் அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் சாலையின் மையத்தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி உசேன் பரிதாபமாக இறந்தார். தேவேந்திரன் சிகிச்சை பெற்று வருகிறார். 
    Next Story
    ×