என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிபழக்கத்தை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்14 Aug 2018 4:02 PM GMT (Updated: 14 Aug 2018 4:02 PM GMT)
குடிபழக்கத்தை மனைவி கண்டித்ததால் லாரி டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
அரியாங்குப்பம் சின்னஇரிசாம்பாளையம் ரோடு சீனுவாசா கார்டன் பகுதியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி(வயது45),லாரி டிரைவர். இவருக்கு கோமதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள மண்ணாங்கட்டி தினமும் சம்பாதிக்கும் பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து செலவழித்து வந்தார்.
இதனை கோமதி கண்டிக்கும் போது அவரையும், மகள்களையும் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுவது வழக்கம்.
அதுபோல நேற்று இரவும் மண்ணாங்கட்டி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை கோமதி கண்டித்துள்ளார். அப்போது அவரையும் குழந்தைகளையும் தாக்கி வீட்டை விட்டு மண்ணாங்கட்டி விரட்டினார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டினார். வழக்கம்போல் கணவர் மிரட்டுவதாக எண்ணி கோமதி மகள்களுடன் பக்கத்து வீட்டில் அமர்ந்து இருந்தார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சந்தேகம் அடைந்து கோமதி வீட்டுக்குள் வந்து பார்த்த போது அங்கு மின்விசிறியில் சேலையால் கணவர் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மண்ணாங்கட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் புதுவை முத்திரையர்பாளையம் காந்திதிருநல்லூர் கணபதி நகரை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் ஹரி (வயது28), கூலித்தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் தொடர்ந்து மதுகுடித்து வந்ததால் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். நேற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த ஹரிதற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அரியாங்குப்பம் சின்னஇரிசாம்பாளையம் ரோடு சீனுவாசா கார்டன் பகுதியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி(வயது45),லாரி டிரைவர். இவருக்கு கோமதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள மண்ணாங்கட்டி தினமும் சம்பாதிக்கும் பணத்தை குடும்ப செலவுக்கு கொடுக்காமல் மதுகுடித்து செலவழித்து வந்தார்.
இதனை கோமதி கண்டிக்கும் போது அவரையும், மகள்களையும் தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுவது வழக்கம்.
அதுபோல நேற்று இரவும் மண்ணாங்கட்டி மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனை கோமதி கண்டித்துள்ளார். அப்போது அவரையும் குழந்தைகளையும் தாக்கி வீட்டை விட்டு மண்ணாங்கட்டி விரட்டினார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டினார். வழக்கம்போல் கணவர் மிரட்டுவதாக எண்ணி கோமதி மகள்களுடன் பக்கத்து வீட்டில் அமர்ந்து இருந்தார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து சந்தேகம் அடைந்து கோமதி வீட்டுக்குள் வந்து பார்த்த போது அங்கு மின்விசிறியில் சேலையால் கணவர் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மண்ணாங்கட்டி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் புதுவை முத்திரையர்பாளையம் காந்திதிருநல்லூர் கணபதி நகரை சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் ஹரி (வயது28), கூலித்தொழிலாளி. திருமணம் ஆகாத இவர் தொடர்ந்து மதுகுடித்து வந்ததால் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். நேற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று கொண்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நோய் கொடுமை அதிகமானதால் மனமுடைந்த ஹரிதற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டின் அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X