search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே தீயில் கருகிய மனைவியை தொடர்ந்து கணவரும் பலி
    X

    திண்டுக்கல் அருகே தீயில் கருகிய மனைவியை தொடர்ந்து கணவரும் பலி

    திண்டுக்கல் அருகே தீயில் கருகி பலியான மனைவியை தொடர்ந்து கணவரும் பரிதாபமாக உயரிழந்தார்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகில் உள்ள செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (வயது28) கூலித்தொழிலாளி. கடந்த 9-ந்தேதி இவர் தனது வீட்டில் இருந்தபோது அவரது மனைவி நாகஜோதி (24) உடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    உடனே நாகஜோதி தான் தீக்குளித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினார். அதற்கு தானும் அதேபோல் தற்கொலை செய்து கொள்வதாக விளையாட்டுக்கு பேசினர்.

    பின்னர் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தபோது உண்மையாகவே இருவர் மீதும் தீ பிடித்தது. அருகில் விளையாடிக்கொண்டிருந்த அவர்களது மகன் நந்தகுமார் (3) என்பவர் மீதும் தீக்காயம் பட்டது.

    பலத்த காயங்களுடன் அவர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். நாகஜோதி மறுநாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

    திண்டுக்கல் அரசு ஆஸ்பத்தியில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்ட காளீஸ்வரன் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×