என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 7½ பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்14 Aug 2018 3:54 PM GMT (Updated: 14 Aug 2018 3:54 PM GMT)
வீட்டில் தூங்கிய பெண்ணிடம் ஜன்னல் வழியாக கையைவிட்டு 7½ பவுன் நகை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் திருநகர் காலனி மில் ரோட்டை சேர்ந்தவர் ஜான் சாமுவேல் (வயது 28). சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் மொபைல் கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி பெயர் ஷீலா (24). நேற்று இரவு வழக்கம்போல இவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். காற்றுக்காக வீட்டு ஜன்னலை திறந்து வைத்திருந்தனர். ஐன்னல் ஓரத்தில் ஷீலா படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவன் வீட்டின் பின்புற சுவர் குதித்தான்.
பிறகு ஜன்னல் வழியாக கையை விட்ட அவன் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ஷீலாவின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகைளை பறித்தான்.
திடுக்கிட்ட ஷீலா எழுந்து சத்தமிட்டார். வெளியே வந்து பார்ப்பதற்குள் அந்த கொள்ளையன் பின்புற சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தியமங்கலம் திருநகர் காலனி மில் ரோட்டை சேர்ந்தவர் ஜான் சாமுவேல் (வயது 28). சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் மொபைல் கடை வைத்துள்ளார்.
இவரது மனைவி பெயர் ஷீலா (24). நேற்று இரவு வழக்கம்போல இவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர். காற்றுக்காக வீட்டு ஜன்னலை திறந்து வைத்திருந்தனர். ஐன்னல் ஓரத்தில் ஷீலா படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவன் வீட்டின் பின்புற சுவர் குதித்தான்.
பிறகு ஜன்னல் வழியாக கையை விட்ட அவன் வீட்டின் உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ஷீலாவின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகைளை பறித்தான்.
திடுக்கிட்ட ஷீலா எழுந்து சத்தமிட்டார். வெளியே வந்து பார்ப்பதற்குள் அந்த கொள்ளையன் பின்புற சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டான்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X