என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடி அருகே காதல் திருமணம் செய்த கர்ப்பிணி தற்கொலை
Byமாலை மலர்14 Aug 2018 3:46 PM GMT (Updated: 14 Aug 2018 3:46 PM GMT)
வேறொரு பெண்ணுடன் கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் காதல் திருமணம் செய்த கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:
காட்பாடி விருதம்பட்டு தண்டல கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் உதயலட்சுமி (வயது 18). இவரும், காட்பாடி அடுத்த திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணி என்கிற மணிகண்டன் (22) என்பவரும் காதலித்தனர்.
பெண் வீட்டார் சம்மதம் இல்லாமல் திருமண வயதை எட்டாத உதயலட்சுமியை கடந்த ஆண்டு மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். பிறகு, திருவலத்திலேயே காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தினார்.
இந்நிலையில் உதயலட்சுமி 3 மாதம் கர்ப்பமடைந்தார். இதனிடையே, வேறொரு இளம்பெண்ணுடன் மணிகண்டனுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் தினமும் போனில் பேசி கொஞ்சி மகிழ்ந்தார்.
மணிகண்டன் போனுக்கு கள்ளக்காதலியிடம் இருந்து அழைப்பு வரும்போது, உதய லட்சுமி திடீரென எடுத்து விட்டால், அவரிடம் கள்ளக் காதலி பேசுவதில்லை. இதனால், காதல் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஆனாலும், கள்ளக்காதலை துண்டிக்காமல் மணிகண்டன் மனைவி முன்பே போனில் கள்ளக்காதலியிடம் பேச ஆரம்பித்தார்.
இதனால் மனமுடைந்த கர்ப்பிணி உதயலட்சுமி நேற்று மாலை வீட்டில் தூக்குப் போட்ட தற்கொலை செய்து கொண்டார். திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, உதயலட்சுமியின் தந்தை விஜயன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் தகராறில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடி விருதம்பட்டு தண்டல கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் உதயலட்சுமி (வயது 18). இவரும், காட்பாடி அடுத்த திருவலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே உள்ள சமத்துவபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் மணி என்கிற மணிகண்டன் (22) என்பவரும் காதலித்தனர்.
பெண் வீட்டார் சம்மதம் இல்லாமல் திருமண வயதை எட்டாத உதயலட்சுமியை கடந்த ஆண்டு மணிகண்டன் வீட்டை விட்டு வெளியே அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார். பிறகு, திருவலத்திலேயே காதல் மனைவியுடன் குடும்பம் நடத்தினார்.
இந்நிலையில் உதயலட்சுமி 3 மாதம் கர்ப்பமடைந்தார். இதனிடையே, வேறொரு இளம்பெண்ணுடன் மணிகண்டனுக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் தினமும் போனில் பேசி கொஞ்சி மகிழ்ந்தார்.
மணிகண்டன் போனுக்கு கள்ளக்காதலியிடம் இருந்து அழைப்பு வரும்போது, உதய லட்சுமி திடீரென எடுத்து விட்டால், அவரிடம் கள்ளக் காதலி பேசுவதில்லை. இதனால், காதல் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஆனாலும், கள்ளக்காதலை துண்டிக்காமல் மணிகண்டன் மனைவி முன்பே போனில் கள்ளக்காதலியிடம் பேச ஆரம்பித்தார்.
இதனால் மனமுடைந்த கர்ப்பிணி உதயலட்சுமி நேற்று மாலை வீட்டில் தூக்குப் போட்ட தற்கொலை செய்து கொண்டார். திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து, உதயலட்சுமியின் தந்தை விஜயன் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் தகராறில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X