என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கீரமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி என்ஜினீயர் பலி
Byமாலை மலர்14 Aug 2018 2:37 PM GMT (Updated: 14 Aug 2018 2:37 PM GMT)
கீரமங்கலம் அருகே நண்பர்களுடன் பேசி கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
கீரமங்கலம்:
கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகரசுதன் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு, தனது நண்பர்களுடன் ஹரிகரசுதன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஹரிகரசுதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஹரிகரசுதனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கீரமங்கலம் அருகே உள்ள மாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஹரிகரசுதன் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று இரவு தனது வீட்டின் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டு, தனது நண்பர்களுடன் ஹரிகரசுதன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஹரிகரசுதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஹரிகரசுதனை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடகாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X