search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்தங்கரை அருகே விவசாயி மர்ம மரணம்
    X

    ஊத்தங்கரை அருகே விவசாயி மர்ம மரணம்

    ஊத்தங்கரை கல்லாவி ரெயில் தண்டவாளம் அருகில் விவசாயி மர்மமாக இறந்து கிடந்தார்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ளது வீராட்சிகுப்பம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டன் (வயது 38), விவசாயி. இவர் நேற்று கல்லாவி ரெயில் தண்டவாளம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கல்லாவி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கோதண்டனின் உடலில் காயம் இருப்பதால் அவரை யாரேனும் அடித்துக்கொலை செய்தார்களா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×