search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விவசாயி பலி
    X

    பாவூர்சத்திரத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதி விவசாயி பலி

    பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நெல்லை:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது47). விவசாயி. இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே தென்காசியில் இருந்து நெல்லையை நோக்கி பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த சோபன் பாபு (25) என்ற வாலிபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். இரண்டு மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேராக மோதியது.

    இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு பழனிச்சாமி பரிதாபமாக இறந்தார். சோபன்பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×