என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவிந்தசாலை அருகே இளம்பெண் தற்கொலை
புதுச்சேரி:
புதுவை கோவிந்தசாலை புதுநகரை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது43), கார் டிரைவர். இவரது மனைவி திலகவதி (32). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இதற்கிடையே திலகவதி கணவருக்கு தெரியாமல் அக்கம்பக்கத்தினரிடம் இருந்து பணம் கடன் வாங்கி சிலருக்கு கொடுத்து வந்தார். ஆனால் பணம் கடன் வாங்கியவர்கள் திலகவதியிடம் சொல்லி கொள்ளாமல் ஊரை விட்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பணத்தை திலகவதியே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த விவரம் தன்ராஜிக்கு தெரியவந்ததும் அவர் திலகவதியை கண்டித்தார். இதனால் திலகவதி விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை தன்ராஜ் சென்னைக்கு சவாரி செல்ல தயாரானார். அப்போது திடீரென திலகவதி துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த தன்ராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டுசிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே திலகவதி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து ஓதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்