search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிந்தசாலை அருகே இளம்பெண் தற்கொலை
    X

    கோவிந்தசாலை அருகே இளம்பெண் தற்கொலை

    கோவிந்தசாலை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை கோவிந்தசாலை புதுநகரை சேர்ந்தவர் தன்ராஜ் (வயது43), கார் டிரைவர். இவரது மனைவி திலகவதி (32). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே திலகவதி கணவருக்கு தெரியாமல் அக்கம்பக்கத்தினரிடம் இருந்து பணம் கடன் வாங்கி சிலருக்கு கொடுத்து வந்தார். ஆனால் பணம் கடன் வாங்கியவர்கள் திலகவதியிடம் சொல்லி கொள்ளாமல் ஊரை விட்டு காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பணத்தை திலகவதியே செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இந்த விவரம் தன்ராஜிக்கு தெரியவந்ததும் அவர் திலகவதியை கண்டித்தார். இதனால் திலகவதி விரக்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை தன்ராஜ் சென்னைக்கு சவாரி செல்ல தயாரானார். அப்போது திடீரென திலகவதி துப்பட்டாவால் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.

    இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த தன்ராஜ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மனைவியை மீட்டுசிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் வழியிலேயே திலகவதி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து ஓதியஞ்சாலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×