search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகன் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை
    X

    விருதுநகரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகன் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை

    விருதுநகரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மகன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டாக இருப்பவர் லட்சுமணன். இவரது மகன் சுவாமிநாதன் (வயது 21). பட்டதாரியான இவர் மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று சுவாமிநாதன் விருதுநகரில் உள்ள வீட்டுக்கு வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டில் இருந்து வெளியேறிய அவர் விருதுநகர் மாவட்ட கோர்ட்டு வளாகம் அருகில் உள்ள தண்டவாள பகுதிக்கு வந்தார்.

    அப்போது அங்கு வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் முன் சுவாமிநாதன் பாய்ந்தார். இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுவாமிநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுவாமிநாதன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை நடந்து வருகிறது. போலீஸ் துணை சூப்பிரண்டின் மகன் தற்கொலை செய்து கொண்டது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×