search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காலம் வரும்போது பொதுக்குழு கூடி திமுக தலைவரை தேர்வு செய்யும் - டி.கே.எஸ். இளங்கோவன்
    X

    காலம் வரும்போது பொதுக்குழு கூடி திமுக தலைவரை தேர்வு செய்யும் - டி.கே.எஸ். இளங்கோவன்

    காலம் வரும்போது திமுக பொதுக்குழு கூடி தலைவரை தேர்வு செய்யும் என டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி தெரிவித்தார். #DMKExecutiveCommittee #TKSElangovan
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் செயற்குழு கூட்டத்தில் பேசிய தலைவர்கள், கருணாநிதியின் கட்சிப் பணிகள், ஆட்சிப் பணிகள் மற்றும் அவரது பெருமைகளை நினைவுகூர்ந்தனர். நிறைவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.



    இக்கூட்டம் முடிந்ததும் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்பி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க மட்டுமே இன்றைய செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டதாக கூறினார். மேலும், காலம் வரும்போது பொதுக்குழு கூடி திமுக தலைவரை தேர்வு செய்யும் என்றும் தெரிவித்தார்.

    திமுகவை உடைக்க யாருக்கும் வலிமை கிடையாது என்றும், அடுத்தவர்களின் சதிக்கும் திமுகவினர் உடன்பட மாட்டார்கள் என்றும் இளங்கோவன் கூறினார். #DMKExecutiveCommittee #TKSElangovan
    Next Story
    ×