என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒப்பந்ததாரர் கொலை: பூந்தமல்லி கோர்ட்டில் 8 பேர் சரண்
பூந்தமல்லி:
எண்ணூர், அன்னை சிவகாமி நகரைசேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது44). வட சென்னை அனல்மின் நிலையத்தில் செங்கல் மணல், பெயிண்டிங் உள்ளிட்ட பல வகையான வேலைகளை ஒப்பந்த முறையில் செய்து வந்தார்.
நேற்று மதியம் அவர் காரில் வடசென்னை அனல் மின்நிலையத்துக்கு வந்தார். அப்போது மர்மகும்பல் ஜேம்சை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அவர் காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த தாக்குதலில் காரை ஓடிவந்த மதன், உடன்வந்த மேற்பார்வையாளர் ராஜேந்திரன் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் இந்த கொலை தொடர்பாக மீஞ்சூரை சேர்ந்த ராஜ்குமார், எட்வின் நேதாஜி, ராஜா சூர்யா, தனுஷ் சந்தோஷ், செல்வா ஆகிய 8 பேர் இன்று காலை பூந்தமல்லி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்