search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரி நர்சு திடீர் மாயம்
    X

    ராமநாதபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரி நர்சு திடீர் மாயம்

    ராமநாதபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரி நர்சு திடீரென மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அம்பலக்காரர் தெருவைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகள் தனலட்சுமி (வயது 20). இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற தனலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த பலனும் இல்லை.

    இது குறித்து பழனி கொடுத்த புகாரின் பேரில் மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயராஜ லட்சுமி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்...

    மதுரை அருகே உள்ள கீழக்குயில்குடி சீனிவாச நகரைச் சேர்ந்தவர் விருமாண்டி. இவரது மகள் நந்தினி(25). தனக்கன்குளம் முல்லை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நந்தினி சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை.

    இது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×