search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்
    X

    சோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்

    கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கும்படி வழங்கிய தீர்ப்பு, சோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி என மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார். #Karunanidhi #MKStalin
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததையடுத்து கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு கூட்டத்தில் பேசிய தலைவர்கள் கருணாநிதியின் கட்சிப் பணிகள் மற்றும் ஆட்சிப் பணிகள் குறித்து விளக்கி அவரை நினைவுகூர்ந்தனர்.

    நிறைவாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது, அண்ணாவின் பக்கத்தில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பதே தலைவர் கருணாநிதியின் ஆசை என்று கூறினார்.



    ‘நீங்கள் அனைவரும் தலைவரை இழந்திருக்கிறீர்கள். நான் தலைவரை மட்டுமல்ல தந்தையையும் இழந்து நிற்கிறேன். மெரினாவில் தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் விதிமுறைப்படி இடம்கொடுக்க வாய்ப்பில்லை என அவர் கூறினார்.

    ஆனால் எப்படியும் இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். மெரினாவில் இடம் கிடைத்ததின் வெற்றி வழக்கறிஞர் குழுவுக்குத் தான் சேரும். அவர்களுக்கு நன்றி. பெரிய சோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி, நீதிமன்ற தீர்ப்பு’ என்றும் ஸ்டாலின் உருக்கமாக பேசினார். #Karunanidhi #MKStalin
    Next Story
    ×