search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரியன் மறைந்ததால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன- தமிழிசை
    X

    சூரியன் மறைந்ததால் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன- தமிழிசை

    சூரியன் மறைந்ததும் வானில் பல நட்சத்திரங்கள் தோன்ற முயற்சிப்பதாகவும் அதில் ஜொலிக்கப் போகும் நட்சத்திரத்தை பொருத்திருந்து பார்ப்போம் என்றும் தமிழிசை கூறினார். #BJP #TamilisaiSoundararajan
    சென்னை:

    தி.மு.க.வில் மு.க.அழகிரி போர்க்கொடி தூக்கி இருப்பது பற்றி பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    நானும் செய்திகளில் படித்தேன். அது அவர்கள் உள்கட்சி பிரச்சனை. ஆனால் ஒரு சூரியன் மறைந்ததும் வானில் பல நட்சத்திரங்கள் தோன்ற முயற்சிக்கின்றன. அதில் ஜொலிக்கப் போகும் நட்சத்திரத்தை பொருத்திருந்து பார்ப்போம்.

    பொதுவாக மிகப்பெரிய தலைவர்கள் எல்லோருமே உள்கட்சி பூசலை வலுவிழக்க செய்யும் வலுவான தலைவர்களாக இருந்தார்கள்.


    கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெரிய தலைவர்கள் இல்லாததால் தமிழக அரசியல் களம் மாறுபட்ட அரசியல் களமாக இதுவரை பார்த்திராத களமாகத்தான் இருக்கும்.

    ஒரு தலைவர் இல்லாததால் ஏற்படும் வெற்றிடத்தில் இருந்து வெற்றிடத்தை பெற வேண்டிய நிலையில் பா.ஜனதா இல்லை. வாக்குச்சாவடி அளவில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை செய்து வருகிறோம்.

    சட்டமன்ற தொகுதி வாரியாக 20 தலைவர்கள் இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள். நான் இன்று ராமநாதபுரம் மாவட்டம் செல்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan #DMK #MKAzhagiri
    Next Story
    ×