search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல்களை திசை திருப்பும் வல்லமை படைத்தவர் முக அழகிரி- பொன்.ராதாகிருஷ்ணன்
    X

    தேர்தல்களை திசை திருப்பும் வல்லமை படைத்தவர் முக அழகிரி- பொன்.ராதாகிருஷ்ணன்

    தேர்தல்களை திசை திருப்பும் வல்லமை மிக்கவர் மு.க.அழகிரி என்று திருவண்ணாமலை சுற்றுலா மாளிகையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #BJP #PonRadhakrishnan #MKAzhagiri #DMK
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று இரவு சாமி தரிசனம் செய்தார்.

    இதையடுத்து இன்று காலை திருவண்ணாமலை சுற்றுலா மாளிகையில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி அரசு நாட்டில் மிகப்பெரிய மாற்றம், வளர்ச்சிக்கான உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக வளர்ச்சியில் மோடி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

    தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் செயல்படுத்தியதை விட அதிக திட்டங்களை தமிழகத்துக்கு தந்து கொண்டே இருக்கிறார்.

    பாலாறு-தென் பெண்ணை ஆறு இணைப்பு திட்டத்துக்கு மோடி அரசு ரூ.648 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்காக தமிழக மக்களாகிய நாம் பிரதமர் மோடிக்கு நன்றிக்கடன் செலுத்த கடமை பட்டிருக்கிறோம். நரேந்திர மோடிக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.


    மு.க.அழகிரி தி.மு.க. தலைவர் கருணாதியின் மூத்த மகன். தி.மு.க. வளர்ச்சியில் அதிகம் பங்காற்றியவர். பல இடைத்தேர்தல், பொதுத் தேர்தல்களில் தி.மு.க.வை வெற்றி பெற செய்தவர். தேர்தலை திசை திருப்பும் வல்லமை மிக்கவர் மு.க.அழகிரி. தி.மு.க.வினர் இதனை கவனிப்பார்கள்.

    மு.க.ஸ்டாலின் மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக இருந்தவர். கனிமொழி எம்.பி.யாக திறம்பட செயல்படுகிறார். ஆகவே தி.மு.க.வில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு எடுப்பார்கள். எந்த கட்சியையும் உடைக்கும் எண்ணம் பா.ஜனதாவுக்கு கிடையாது.

    ஜனநாயக முறையில் பா.ஜனதா வளர்ச்சி நோக்கி அடியெடுத்து வைக்கும். தமிழகத்தில் முதல் நிலைக்கு வரும். வருகிற தேர்தலில் பா.ஜ.க. அமைப்பது முதன்மையான வெற்றிக் கூட்டணியாக அமையும்.

    பதக்கம், விருது தருவதால், சிலை வைப்பதால் தலைவர்கள் கவுரவபடுத்தப்படுவார்கள் என்றில்லை. தலைவர்கள் செய்த நன்மைகளை எடுத்து கொண்டு அதன் வழி நடக்க வேண்டும்.

    கருணாநிதி இறுதி சடங்கில் பங்கேற்ற அமைச்சரின் கார் கண்ணாடி சேதபடுத்தப்பட்டது. அது போன்ற அசம்பாவிதங்களை தடுக்கவே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கருணாநிதி இறுதி சடங்கில் பங்கேற்காமல் இருந்திருக்கலாம்.

    அ.தி.மு.க., தி.மு.க. பகைமைதான் அவர்களுக்கு பலமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #MKAzhagiri #DMK
    Next Story
    ×