search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் மூழ்கி மாணவி பலி
    X

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் மூழ்கி மாணவி பலி

    ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏரியில் மூழ்கி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் இவரது மகள் நிவேதா (வயது 9). அதே பகுதியில்உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று அவர் தோழிகளுடன் அதே பகுதியில் உள்ள ஏரியில் விளையாட சென்றார். அப்போது அனை வரும் ஏரியில் குளித்தனர்.

    ஆழமான பகுதிக்கு சென்ற நிவேதா தண்ணீரில் மூழ்கினார். உடன் வந்த தோழிகள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர். உடனடியாக அப்பகுதி மக்கள் ஏரியில் இறங்கி நிவேதாவை தேடினர். சுமார் ½ மணி நேரத்துக்கு பின்னர் நிவேதா பிணமாக மீட்கப்பட்டார்.

    இது குறித்து சோமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×