search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
    X

    திருவள்ளூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

    திருவள்ளூர் அருகே என்ஜினீயர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    செவ்வாப்பேட்டை:

    திருவள்ளூர் அருகே உள்ள புட்லூரை சேர்ந்தவர் ஹேமசந்த். பூந்தமல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார்.

    நேற்று முன்தினம் அவர் செங்கல்பட்டு அருகே நடந்த கோவில் திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்றார்.

    நேற்று மாலை திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளை கும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்று விட்டனர்.

    இது குறித்து செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×