என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடி துப்பாக்கி சூடு - சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்
Byமாலை மலர்14 Aug 2018 6:09 AM GMT (Updated: 14 Aug 2018 6:09 AM GMT)
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக காவல்துறை மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வரும் நிலையில், இதுபற்றி சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #CBIProbeThoothukudiFiring #MadrasHC
சென்னை:
அதேசமயம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பல்வேறு பொதுநல வழக்குகள் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகளும் வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. வழக்கு விசாரணையின்போது துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று நீதிபதிகள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 6 பேர் மீதான வழக்குகளையும் ரத்து செய்தனர். #ThoothukudiFiring #CBIProbeThoothukudiFiring #MadrasHC
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த மே மாதம் 22-ந் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி ஆனார்கள். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. அதன்படி அந்த ஆலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேசமயம் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் பல்வேறு பொதுநல வழக்குகள் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு இடைக்கால உத்தரவுகளும் வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்குகள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. வழக்கு விசாரணையின்போது துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று நீதிபதிகள் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இவ்வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, துப்பாக்கி சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 6 பேர் மீதான வழக்குகளையும் ரத்து செய்தனர். #ThoothukudiFiring #CBIProbeThoothukudiFiring #MadrasHC
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X