என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
படிக்க பிடிக்காததால் விபரீத முடிவு: பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்13 Aug 2018 6:17 PM GMT (Updated: 13 Aug 2018 6:17 PM GMT)
தேனியில், படிக்க பிடிக்காததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி போலீஸ் நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 45). இவர் தேனியில் சாலையோரம் கரும்புச்சாறு விற்பனை செய்து வருகிறார். அவருடைய மகள் வசந்தி (17). இவர், தேனியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் தனக்கு படிப்பு சரிவர வரவில்லை என்றும், படிக்க பிடிக்காததால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை என்றும் தனது பெற்றோரிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மேல் மாடியில் இருந்த மகளை சாப்பிடுவதற்கு அழைப்பதற்காக மணிகண்டன் சென்றார். அப்போது அங்குள்ள அறையில் வசந்தி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், படிக்க பிடிக்காததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி போலீஸ் நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 45). இவர் தேனியில் சாலையோரம் கரும்புச்சாறு விற்பனை செய்து வருகிறார். அவருடைய மகள் வசந்தி (17). இவர், தேனியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் தனக்கு படிப்பு சரிவர வரவில்லை என்றும், படிக்க பிடிக்காததால் பள்ளிக்கு செல்ல விருப்பம் இல்லை என்றும் தனது பெற்றோரிடம் கூறி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மேல் மாடியில் இருந்த மகளை சாப்பிடுவதற்கு அழைப்பதற்காக மணிகண்டன் சென்றார். அப்போது அங்குள்ள அறையில் வசந்தி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், படிக்க பிடிக்காததால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X