search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிப்சம் ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து
    X

    ஜிப்சம் ஏற்றி வந்த லாரி சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்து

    ஜிப்சம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
    பெரம்பலூர்:

    நாமக்கல்லில் இருந்து அரியலூரில் உள்ள ஒரு சிமெண்டு தொழிற்சாலைக்கு சிமெண்டு தயாரிப்பதற்கு பயன்படும் மூலபொருளான ஜிப்சம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று நேற்று அதிகாலை புறப்பட்டது. இந்நிலையில் துறையூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது பெரம்பலூர் அருகே உள்ள செஞ்சேரி அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரி சாலையின் மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. ஆனால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச் சுவரில் லாரி மோதி விபத்துக்குள்ளானதால் சுமார் அரை மணி நேரம் துறையூர்-பெரம்பலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×