search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோபியில் மாயமான 2 மாணவர்கள் மீட்பு
    X

    கோபியில் மாயமான 2 மாணவர்கள் மீட்பு

    கோபியில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு சென்ற மாணவர்கள் 2 பேர் மீட்கப்பட்டனர்.
    கோபி:

    கோபியில் 10-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் திடீரென மாயமானார்கள். இவர்கள் பள்ளி கூடம் போவதாக சொல்லிவிட்டு ஈரோடு வந்தனர்.

    நண்பர்கள் மற்றும் உறவினர்களான இவர்கள் ஈரோடு ரெயில் நிலையம் வந்தனர். பிறகு இருவரும் சென்னை செல்லும் ரெயிலில் ஏறினர். நேற்று அதிகாலை சென்னை ரெயில் நிலையத்தில் இறங்கி எங்கே செல்வது? என தவித்தப்படி இருந்தனர்.

    இதற்கிடையே மாணவர்கள் மாயமானது பற்றி கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாணவர்களை பல இடங்களில் தேடி வந்தனர். மேலும் செல்போன், வாட்ஸ்அப் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

    சென்னை ரெயில் நிலையத்தில் தவித்த 2 மாணவர்களை கண்டு போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் வந்த போட்டோகளை வைத்து பார்த்த போது மாயமான கோபியை சேர்ந்த மாணவர்கள் தான் இவர்கள் என தெரிய வந்தது.

    உடனே சென்னை போலீசார் கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கோபி போலீசார் சென்னை சென்று மாணவர்களை மீட்டு வந்தனர். அவர்களிடம் போலீசார், ‘‘ஏன் சொல்லி கொள்ளாமல் சென்னை போனீர்கள்?’’ என்று கேட்டனர். அதற்கு மாணவர்கள் ‘‘பரீட்சையில் நாங்கள் குறைவான மதிப்பெண் எடுத்திருந்தோம். இதனால் வீட்டில் திட்டுவார்கள் என பயந்த போய் விட்டோம்’’ என்று கூறினர்.

    பிறகு மாணவர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×