search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டுப்பாளையம் தனியார் மாத்திரை தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து
    X

    மேட்டுப்பாளையம் தனியார் மாத்திரை தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து

    மேட்டுப்பாளையம் தனியார் மாத்திரை தொழிற்சாலையில் இன்று காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் பொருட்கள் எரிந்து சேதமானது.

    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் 22-வது குறுக்கு தெருவில் மாத்திரை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. விலை உயர்ந்த மாத்திரைகள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலை முழுவதும் குளிர்சாதன வசதி கொண்டது.

    தொழிற்சாலையின் மேல்தளத்தில் மாத்திரைகள் தயாரிப்பும், கீழ்தளத்தில் மாத்திரைகளை சேமிக்கும் குடோனும் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 7மணியளவில் இந்த தொழிற்சாலை குடோனில் இருந்து திடீரென புகைமூட்டம் கிளம்பியது. இதனை பார்த்ததும் தொழிற்சாலையில் மேல்தளத்தில் மாத்திரை தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு தொழிற்சாலையில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.

    பின்னர் இதுகுறித்து உடனடியாக கோரிமேடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் தீமுட்டம் அதிகமாக கிளம்பியதால் புதுவை, வில்லியனூர், சேதராப்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. அவர்கள் கோரிமேடு தீயணைப்பு படையினருடன் இணைந்து மேலும் தீபரவாமல் அணைத்தனர்.

    இந்த திடீர் தீவிபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மாத்திரைகள் மற்றும் பொருட்கள் எரிந்து சேதமானது. இந்த தீவிபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×