search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டை சிப்காட்டில் பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை
    X

    ராணிப்பேட்டை சிப்காட்டில் பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை

    சிப்காட்டில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பிளஸ்-2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை சிப்காட் காமராஜர் நகரை சேர்ந்தவர் மனோகர். இவருடைய மகன் கிஷோர்குமார் (வயது 17). பெல் ராமகிருஷ்ணா மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த சில நாட்களாக கிஷோர்குமார் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். 

    விடுமுறை நாளான நேற்று வீட்டில் இருந்த கிஷோர் குமாருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. வலி அதிகமாகி துடித்துள்ளார். பிறகு, என்ன செய்வதென்று தெரியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார்.

    குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ராணிப்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோர்குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து, சிப்காட் போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். வழக்குப்பதிந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×