search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்
    X

    திருவாரூரில் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ்

    திருவாரூரில் பஸ்சில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவர் மனைவி குணசுந்தரி (வயது 62). இவர் நேற்று மயிலாடுதுறைக்கு சென்று அங்குள்ள ஒரு நகைக் கடையில் 2¼ பவுனில் ஒரு செயின் வாங்கினார். அதனை பையில் வைத்து கொண்டு பஸ்சில் திருவாரூர் வந்தார்.

    அப்போது பஸ்சில் வைத்து மர்ம நபர் குணசுந்தரி வைத்திருந்த நகையை அபேஸ் செய்து விட்டார். வீட்டுக்கு சென்ற குணசுந்தரி பையில் வைத்திருந்த செயின் மாயமாகி விட்டதை அறிந்து திடுக்கிட்டார். இதனால் வேதனை அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் இதுபற்றி அவர் திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரோண்யா வழக்குப்பதிவு செய்து குணசுந்தரியிடமிருந்து நகையை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகிறார்.

    Next Story
    ×