search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே திருமணத்துக்கு மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது
    X

    தேனி அருகே திருமணத்துக்கு மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது

    தேனி அருகே திருமணத்திற்கு மைனர் பெண்ணை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    தேனி:

    தேனி அருகே வாழையாத்துப்பட்டி ஊர்காவலன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது19). இவர் போடி திருமலாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்தார்.

    பின்பு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். அந்த பெண்ணை ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் மேட்டுப்பாளையம் அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக உறவு கொண்டுள்ளார். மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    எங்கும் கிடைக்காததால் போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×