search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹேமச்சந்திரா
    X
    ஹேமச்சந்திரா

    கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த முதியவர் பலி

    மாமல்லபுரம் அருகே மனைவியிடம் நகை பறித்ததை தடுத்த போது கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் காயம் அடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அருகே உள்ள பையனூரில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தவர் ஹேமச்சந்திரா ரெட்டி (வயது 75). இவரது மனைவி ஜெயாம்மா (68). ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர்கள் தனியாக வசித்து வந்தனர்.

    கடந்த 9-ந்தேதி காலை கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் ஜெயாம்மாவிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். ஜெயாம்மா வீட்டிற்குள் சென்ற போது உள்ளே புகுந்த 2 பேரும் அவரை கத்தி முனையில் மிரட்டி நகையை பறிக்க முயன்றனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஹேமச்சந்திரா, கொள்ளையர்கள் 2 பேரையும் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஹேமச்சந்திரா, அவரது மனைவி ஜெயாம்மா ஆகிய 2 பேரையும் கத்தியால் குத்தினர். பின்னர் ஜெயாம்மா கழுத்தில் கிடந்த 8 பவுன் நகையை பறித்து தப்பி சென்று விட்டனர்.

    பலத்த காயம் அடைந்த 2 பேருக்கும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஹேமச்சந்திரா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×