என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அத்தனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த துண்டு பிரசுரம் வினியோகம்
Byமாலை மலர்12 Aug 2018 5:39 PM GMT (Updated: 12 Aug 2018 5:39 PM GMT)
அத்தனூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பேனர் வைத்தும் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
வெண்ணந்தூர்:
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அத்தனூர் முதல் நிலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. இந்த நிலையில் அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் தட்டு மற்றும் கப்புகள், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக் கூடிய அலுமினியம் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் கொள்முதல் செய்யவோ, இருப்பு வைக்கவோ, பயன்படுத்தவோ விற்பனை செய்யவோ கூடாது என அத்தனூர் பேரூர் செயல் அலுவலர் சதாசிவம் தெரிவித்துள்ளார். இதை மீறி பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வாரச்சந்தைக்கு சென்று பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பேனர் வைத்தும் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பைகள், சணல் பைகள், காகித கவர்கள், சில்வர் கண்ணாடி டம்ளர்கள், வாழை இலைகள், பாக்கு மட்டைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்து அத்தனூர் முதல் நிலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகம் இருந்து வந்தது. இந்த நிலையில் அரசு பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் அனைவரும் பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப், தெர்மாகோல் தட்டு மற்றும் கப்புகள், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தக் கூடிய அலுமினியம் லேமினேட் செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் கொள்முதல் செய்யவோ, இருப்பு வைக்கவோ, பயன்படுத்தவோ விற்பனை செய்யவோ கூடாது என அத்தனூர் பேரூர் செயல் அலுவலர் சதாசிவம் தெரிவித்துள்ளார். இதை மீறி பயன்படுத்துவோர் மீது அபராதம் விதிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வாரச்சந்தைக்கு சென்று பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்து பேனர் வைத்தும் துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக துணிப்பைகள், சணல் பைகள், காகித கவர்கள், சில்வர் கண்ணாடி டம்ளர்கள், வாழை இலைகள், பாக்கு மட்டைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க ஒத்துழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X