search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடுவூர் அருகே பெண்ணிடம் 6½ பவுன் செயின் பறிப்பு
    X

    வடுவூர் அருகே பெண்ணிடம் 6½ பவுன் செயின் பறிப்பு

    வடுவூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 6½ பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள புன்னவராயன் குடி காட்டை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவரது மனைவி கவிதா (வயது 45). தாமரைசெல்வனும், கவிதாவும் மோட்டார் சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்றனர்.

    அவர்கள் திருமங்கலம் என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென கவிதா அணிந்திருந்த 6½ பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த கவிதா காயமடைந்தார். இதுபற்றி கவிதா வடுவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த 2 பேரையும் தேடி வருகிறார்.

    இந்த சம்பவம் வடுவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×