search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலை அருகே 2 குழந்தைகளின் தாய் கடத்தல்
    X

    தக்கலை அருகே 2 குழந்தைகளின் தாய் கடத்தல்

    2 குழந்தைகளின் தாய் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.
    தக்கலை:

    தக்கலை அருகே மருதூர் குறிச்சியை சேர்ந்தவர் செல்வன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிதா (வயது 30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 3-ந்தேதி விஜிதா காட்டாத்துறை பகுதியில் உள்ள தனது தந்தை ராசைய்யன் வீட்டிற்கு சென்றார். தந்தை வீட்டில் இருந்து வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற விஜிதா வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவரது தந்தை ராசைய்யன் மகளை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் விஜிலாவை அவரது சகோதரி கணவரின் உறவினர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டார். அவரிடம் இருந்து தனது மகளை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து மாயமான விஜிதாவை தேடி வருகிறார்கள். அவரது செல்போன் உதவியுடன் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    Next Story
    ×