என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்கலை அருகே 2 குழந்தைகளின் தாய் கடத்தல்
Byமாலை மலர்12 Aug 2018 3:03 PM GMT (Updated: 12 Aug 2018 3:03 PM GMT)
2 குழந்தைகளின் தாய் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.
தக்கலை:
தக்கலை அருகே மருதூர் குறிச்சியை சேர்ந்தவர் செல்வன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிதா (வயது 30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த 3-ந்தேதி விஜிதா காட்டாத்துறை பகுதியில் உள்ள தனது தந்தை ராசைய்யன் வீட்டிற்கு சென்றார். தந்தை வீட்டில் இருந்து வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற விஜிதா வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது தந்தை ராசைய்யன் மகளை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் விஜிலாவை அவரது சகோதரி கணவரின் உறவினர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டார். அவரிடம் இருந்து தனது மகளை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து மாயமான விஜிதாவை தேடி வருகிறார்கள். அவரது செல்போன் உதவியுடன் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X