search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேதராப்பட்டு அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த கட்டிட தொழிலாளி கைது
    X

    சேதராப்பட்டு அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த கட்டிட தொழிலாளி கைது

    சேதராப்பட்டு அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

    சேதராப்பட்டு:

    சேதராப்பட்டு அருகே கரசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலையரசன், டிரைவர். நேற்று இவரது குழந்தைகள் அருகில் உள்ள தென்னந்தோப்பில் விளையாடி கொண்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (41) என்பவர் அந்த குழந்தைகளை மிரட்டி விரட்டியதாக கூறப்படுகிறது.

    இதனை கலையரசனின் மனைவி பாஞ்சாலி (35) கிருஷ்ணமூர்த்தியிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளால் திட்டி பாஞ்சாலியை தாக்கினார். மேலும் ஆடையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்து கொலை செய்து விடுவதாக பாஞ்சாலியை மிரட்டினார்.

    இதுகுறித்து பாஞ்சாலி சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி பெண்ணை தாக்கி கொலை மிரட்டல், மானபங்கம் செய்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி மீது ஏற்கனவே இதுபோல் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×