search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செய்யாறில் 3 பெண்களை திருமணம் செய்த வாலிபர் கைது
    X

    செய்யாறில் 3 பெண்களை திருமணம் செய்த வாலிபர் கைது

    செய்யாறில் 3 பெண்களை திருமணம் செய்த வாலிபர் குறித்து இரண்டாவது மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த திருமணி கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவர், கடந்த 2012-ம் ஆண்டில் செய்யாறு பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சுதா என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    சுதாவுடன் ஒரு ஆண்டு குடும்பம் நடத்தி விட்டு 2013-ம் ஆண்டு விவகாரத்து பெற்று பிரிந்து விட்டார். அதைத்தொடர்ந்து, திருமணி கிராமத்திலேயே வசிக்கும் தனது அத்தை மகள் அனிதா (22) என்ற இளம்பெண்ணை வற்புறுத்தி இனி ஒழுங்காக இருப்பதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டு 2-வதாக திருமணம் செய்தார்.

    தட்சிணபிரியா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திருமணியில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்துவந்த சரிதா (20) என்ற இளம்பெண்ணை கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு பார்த்தார். சரிதாவிடம் தனக்கு திருமணமாகவில்லை என்று கூறி காதலை சொன்னார். சரிதாவும் குமரேசனை காதலித்தார். இதையடுத்து, சரிதாவை 3-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    யாருக்கும் தெரியாமல் இருக்க சரிதாவை வேலூரில் குடித்தனம் வைத்தார். இந்த நிலையில், 2-வது மனைவி அனிதாவுக்கு விவகாரம் தெரியவந்தது. அவர் செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து குமரேசனை கைது செய்தனர்.

    Next Story
    ×