search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒகேனக்கல்லில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
    X

    ஒகேனக்கல்லில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

    ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கினால் சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
    ஒகேனக்கல்

    ஒகேனக்கல்லுக்கு இன்று காலை 6 மணிக்கு நீர்வரத்து 1 லட்சத்து 22 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இந்த நீர்வரத்து 11 மணிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் காவிரியின் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது. ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கினால் சத்திரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    கர்நாடக மாநிலம் ஆலம்பாடி பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் பாலத்தின் வழியாக வந்து ஐவர்பாணி அருவியை ரசிப்பார்கள். தற்போது அந்த பாலத்துக்கு மேல் வெள்ளம் செல்கிறது. இதேபோல ஒகேனக்கல் நடைபாதைக்கு மேல் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது.
    Next Story
    ×