search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    விழுப்புரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

    விழுப்புரம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
    செஞ்சி:

    விழுப்புரம் அருகே உள்ள சூரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மனைவி மல்லிகா(வயது 55). பூ வியாபாரியான மல்லிகா நேற்று முன்தினம் காற்றோட்டத்துக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த மல்லிகாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்து எழுந்த மல்லிகா மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த மர்மநபரை பிடிப்பதற்காக விரட்டி சென்றனர். ஆனால் அந்த மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிஓடிய மர்மநபரை தேடி வருகிறார்கள். 
    Next Story
    ×