search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லா சுதந்திர தினம் கொண்டாட கலெக்டர் உத்தரவு
    X

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லா சுதந்திர தினம் கொண்டாட கலெக்டர் உத்தரவு

    சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தாமல் காகிதத்தினால் செய்யப்பட்ட தேசிய கொடியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கந்தசாமி கூறியுள்ளார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளாஸ்டிக் இல்லா சுதந்திர தினம் கொண்டாட மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் சுதந்திர தினத்தன்று பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசிய கொடியை பயன்படுத்தாமல் காகிதத்தினால் செய்யப்பட்ட தேசிய கொடியை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கந்தசாமி கூறியுள்ளார்.

    இந்திய தேசிய கொடி என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் வேலையில் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளவும், உண்மையான பாதையில் செல்லவும், தர்மத்தின் படியும், சட்டத்தின் படியும், நடப்பதற்கான உத்வேகத்தை அளிக்கக் கூடியது.

    இன்றைய கால கட்டத்தில் உலகளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழித்திட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளும் பிளாஸ்டிக் ஒழிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைள், விழிப்புணர்வுகள் பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்கள்.

    பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுகிறது. கால்நடைகள், விலங்களுகள் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    இதனால் 15-ந்தேதி அன்று நடைபெறும் 72-வது சுதந்திர தினத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் காகிதத்தினால் செய்யப்பட்ட இந்திய தேசிய கொடியை பயன்படுத்த வேண்டும்.

    நம் வருங்கால சந்ததியினர் ஆரோக்கியமான, சுகாதாரமான சுற்றுச்சூழலில் வாழ்வதற்கு நாம் வழிவகை செய்வோம். ‘பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்போம், பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவோம்’ என கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×