என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டி.டி.வி. தினகரன் 19-ந்தேதி வேலூர் வருகை
Byமாலை மலர்11 Aug 2018 10:14 AM GMT (Updated: 11 Aug 2018 10:21 AM GMT)
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற 19-ந்தேதி வேலூர் வருகிறார்.
வேலூர்:
வேலூர் மாங்காய் மண்டி அருகில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக அவைத்தலைவர் நாமக்கல் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் கொணவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கட்சியின் அவைத் தலைவர் நாமக்கல் அன்பழகன், தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், அமைப்பு செயலாளர்கள் செந்தில்பாலாஜி, சி.கோபால், ஞானசேகரன், மாவட்ட செயலாளர்கள் என்.ஜி.பார்த்திபன், பாலசுப்பிரமணி, கலையரசு மற்றும் ஜெயந்தி பத்மநாபன், கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்பு பால் பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் பாண்டு ரங்கன், வடிவேல், முன்னால் எம்.எல்.ஏ. சந்திரசேகர், எல்.கே.எம்.பி.வாசு, தோட்டப்பாளையம் எஸ்.கே.மோகன் மற்றும் பகுதி செயலாளர்கள் கட்சி அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் டி.டி.வி. தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
வேலூர் மாங்காய் மண்டி அருகில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழக அவைத்தலைவர் நாமக்கல் அன்பழகன் மற்றும் நிர்வாகிகள் நேற்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனை கூட்டம் கொணவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கட்சியின் அவைத் தலைவர் நாமக்கல் அன்பழகன், தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், அமைப்பு செயலாளர்கள் செந்தில்பாலாஜி, சி.கோபால், ஞானசேகரன், மாவட்ட செயலாளர்கள் என்.ஜி.பார்த்திபன், பாலசுப்பிரமணி, கலையரசு மற்றும் ஜெயந்தி பத்மநாபன், கிழக்கு மாவட்ட பொருளாளர் அப்பு பால் பாலாஜி, முன்னாள் அமைச்சர்கள் பாண்டு ரங்கன், வடிவேல், முன்னால் எம்.எல்.ஏ. சந்திரசேகர், எல்.கே.எம்.பி.வாசு, தோட்டப்பாளையம் எஸ்.கே.மோகன் மற்றும் பகுதி செயலாளர்கள் கட்சி அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் டி.டி.வி. தினகரன் பங்கேற்கும் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X