search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆம்பூர் அருகே வியாபாரி வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை
    X

    ஆம்பூர் அருகே வியாபாரி வீட்டில் 23 பவுன் நகை கொள்ளை

    ஆம்பூர் அருகே வியாபாரியின் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் கூட்ரோடு, ஈத்கா மைதானம் பகுதியை சேர்ந்த சமிஉல்லா மகன் அஸ்லாம் பாஷா (வயது 30). இவர் ஆம்பூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகே பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று அஸ்லாம் பாஷா குடும்பத்தினரோடு பெங்களூருவிற்கு வீட்டை பூட்டி விட்டு சென்றார். வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 23 பவுன் நகை, மற்றும் ரூ.85 ஆயிரம் பணத்தை திருடிச் சென்று விட்டனர்.

    வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் அஸ்லாம்பாஷாவிற்கு தகவல் கொடுத்தனர்.

    அதிர்ச்சியடைந்து வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இது குறித்து அஸ்லாம்பாஷா உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்தை பார்வையிட்ட போலீசார் கொள்ளையர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×