என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல்-கோவிலூருக்கு அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் தவிப்பு
எரியோடு:
திண்டுக்கல்லில் இருந்து எரியோடு வழியாக கோவிலூருக்கு தினசரி காலை மற்றும் மாலையில்அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. புங்கம்பாடி கிராமத்துக்குள் வந்து பின்னர் கோவிலூர் செல்லும் பாதை சேதமடைந்து இருந்ததால் அந்த பஸ் கடந்த 1 வருடத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
இந்த பஸ்சில் புங்கம்பாடி, தங்கம்மாபட்டி, ஆர்.கே.புதூர், தொப்பாநாயக்கனூர், ஆவள கவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் சென்று வந்தனர்.
ஆனால் தற்போது பஸ் இயக்கப்படாததால் 2 கி.மீ தூரம் நடந்து புங்கம்பாடி பிரிவில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். மாலை நேரங்களில் நீண்ட தூரம் நடந்து வரும் மாணவர்கள் மயக்கமடைந்து விழும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த வழித்தடத்தில் மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்