என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கன்னியகோவிலில் தீமிதி திருவிழாவில் மோதல்- 5 பேர் கைது
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே கன்னியகோவிலில் பிரசித்தி பெற்ற பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.
விழாவில் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இந்த நிலையில் தீமிதி விழா நடைபெற்று கொண்டிருந்த போது ஏற்கனவே முன் விரோதத்தை வைத்து கொண்டு வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த இளைஞர்களும், மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும் மோதலில் ஈடுபட்டனர். ஒருவரையொருவர் கையாலும், தடியாலும் தாக்கிக்கொண்டனர்.
இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. விழாவை காண வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 2 கிராமத்தை சேர்ந்த வாலிபர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
மேலும் மோதலில் ஈடுபட்ட வார்க்கால் ஓடை புதுநகரை சேர்ந்த வசந்தகுமார் (19), ராயப்பன் (24), கலைச்செல்வன் (27) மற்றும் மணப்பட்டு கிராமத்தை சேர்ந்த விஜய மூர்த்தி (24), அருண்ராஜ் (19) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த மோதல் தொடர்பாக 2 கிராமத்தை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்