search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - சொந்த செலவில் அமைக்கிறார் திருநாவுக்கரசர்
    X

    அறந்தாங்கியில் கருணாநிதிக்கு வெண்கலச் சிலை - சொந்த செலவில் அமைக்கிறார் திருநாவுக்கரசர்

    திமுக தலைவர் கருணாநிதிக்கு முழு திருவுருவ வெண்கல சிலை நிறுவப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார். #Karunanidhi #Thirunavukkarasar
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக 11 நாட்கள் காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது இறுதி சடங்குகள் நிறைவுற்று 8-ம் தேதி மாலை அவர் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

    முதுபெரும் அரசியல் தலைவர் கருணாநிதிக்கு தமிழக மக்களும், தொண்டர்களும் விடிய விடிய அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுகவின் திருச்சி சிவா முன்வைத்தார்.



    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில், திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும், கருணாநிதிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதும், சென்னை நகரின் பிரதான சாலைக்கு கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். #Karunanidhi #Thirunavukkarasar
    Next Story
    ×